Type Here to Get Search Results !

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி

Top Post Ad

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி 



கோவை அருகே தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் படையில் போலீஸ் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 



இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நேற்று  அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி பள்ளி ஐ.ஜி. மகேஸ்வர்தயள் உத்தரவின் பேரில் கமாண்டோ ராஜேஸ்குமார், துணை கமாண்டோ அனஸ் ஆகியோர் தலைமையில்  இன்ஸ்பெக்டர்கள் கோஷ், பிரபு மற்றும் 9 பயிற்சியாளர்கள் உட்பட  70 வீரர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் ஆழியாறு அணை அளிக்கப்பட்டது.



நிலநடுக்கம், மழை, வெள்ள காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் டிரம்ப், கேன் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு உருவாக்கப்பட்ட படகில் அணையின் மைய பகுதிக்கு சென்று, அங்கு நீரில் தத்தளிக்கும் ஒருவரை மீட்டு, கரைக்கு திரும்புவது போன்று தத்ரூபமாக செயல்விளக்கம் அளித்தனர். மேலும் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.


Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.