Type Here to Get Search Results !

அதிமுகவில் சசிகலாவை இணைக்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி #Edappadi_Palanisamy, #Sasikala

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தவிட்டு செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:



புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறி உள்ளார்.


இதைத்தொடர்ந்து, வி.கே.சசிகலா சம்மந்தமான  செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:



வி.கே.சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. வி.கே.சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை. ஜெயலலிதா இருக்கும்போது வி.கே.சசிகலா அதிமுகவிலேயே இல்லை. வி.கே.சசிகலாவுடன் இருந்த பெரும்பாலோனார் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். சிலர்தான் அவருடன் உள்ளனர்.


இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies