தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 22ஆம் தேதி அனைத்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
டெல்லிக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் வருகிற 22ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்துத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
முதலமைச்சர் எடப்பாடியின் டெல்லி பயணம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இடைக்கால பட்ஜெட் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் அனைத்து துறை அமைச்சர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.