Type Here to Get Search Results !

கோவையில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டிக்காண ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் - உற்சாக வரவேற்பு!

கோவையில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டிக்காண ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் - உற்சாக வரவேற்பு!



மாமல்லபுரத்தில் 28ஆம் தேதி தொடங்கவுள்ள 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காண ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டு வரப்பட்டுள்ளது.


கோயம்புத்தூர் ஜூலை 25: 

மாமல்லபுரத்தில் 28ஆம் தேதி தொடங்கவுள்ள 44-ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கவுள்ள நிலையில்,  ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டது. கோவை கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் ஒலிம்பிக் ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் அளித்தனர்.


இந்நிலையில் ஒலிம்பிக் ஜோதி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுப்பிரமணியம் சிலை அருகில் இருந்து கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டமானது பந்தய சாலையில் தொடங்கி, அவிநாசி சாலை வழியாக கொடிசியா அரங்கு வரை சென்று நிறைவடைந்தது.


அதன்பின் ஒலிம்பிக் ஜோதியை அமைச்சர்கள் செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் வழங்கினர். பாரம்பரிய கலைகள், இசை முழக்கங்கள் முழங்க ஒலிம்பிக் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies