Type Here to Get Search Results !

கஞ்சா போதையில் நண்பரை கழுத்தறுத்து கொலை - கொலையாளி கைது

கஞ்சா போதையில் நண்பர் கழுத்தறுத்து கொலை - கொலையாளி கைது


திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் சுற்றித் திரிந்த நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.


 திண்டுக்கல்: மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த அர்ஜுனன் (35) என்பவரும் மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் அன்பரசன் (20) என்பவரும் நண்பர்கள். இவர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் சுற்றித் திரிந்தனர்.




 இருவருக்கும் கஞ்சா போடும் பழக்கம் உள்ளதாகவும் தெரிகிறது. போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பிரான்சிஸ் அன்பரசன், அர்ஜுனனை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.


காவல் துறை விசாரணை


இதனைக் கண்ட பயணிகள் அங்கிருந்து ஓடினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் உலகநாதன் உள்ளிட்ட காவல் துறையினர், பிரான்சிஸ் அன்பரசை கைது செய்தனர்.தொடர்ந்து, அர்ஜூனனின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies