திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதி தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பவானிசாகர், சிவகங்கை, திருப்பூர் வடக்கு, வால்பாறை, திருத்துறைப்பூண்டி, தளி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், அதிமுகவுடன் நேரடியாக பவானிசாகர் (தனி), வால்பாறை (தனி), சிவகங்கை, திருப்பூர் வடக்கு, திருத்துறைப்பூண்டி (தனி) ஆகிய 5 இடங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் எதிர்த்து போட்டியிடுகிறது.


