Type Here to Get Search Results !

சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, பதிலளிக்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி

சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, பதிலளிக்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி



கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அவரது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவருக்கு அதிமுக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் மலர்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். 


இதையடுத்து, திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியிடம் வி.கே.சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, பதிலளிக்காமல் அவர் புறப்பட்டுச் சென்றார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies