பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, முடங்கிக்கிடந்த அவர் குணமாகி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார். இந்தநிலையில், சசிகலா அரசியலில்லிருந்து ஒதுங்குகிறேன் என்று சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து, தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளேன்; மக்களை விரைவில் சந்திப்பேன் என்று கூறிய சசிகலா திடீரென, தான் அரசியலில்லிருந்து ஒதுங்குகிறேன்; அதிமுக வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அறிவித்தத்தார். பல நெருக்கடிகளின் காரணமாகதான் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் நீர்த்துப்போய்விடக் கூடாது என்பதாலும், அமமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க சொன்னால், அது அதிமுகவுக்கு எதிரானதாக மாறிவிடும் என்று எண்ணிய சசிகலா இந்தத் தேர்தலில் அமைதியாக இருக்க, முடிவெடுத்து ஒதுங்கியுள்ளார்.
இந்நிலையில், சசிகலா ஆன்மீகத்தை நோக்கி செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. நாளை மறுநாள் மார்ச் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்தநிலையில், இன்று திநகர் அகஸ்தியர் கோயிலுக்கு சசிகலா வந்து சென்றுள்ளார். ஆடம்பரம், ஆரவாரம் இல்லாமல் வந்துசென்ற சசிகலாவை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.



