அதிமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அறிவித்தது . கூட்டணியில் 25 தொகுதிகளை கேட்ட தேமுதிகவுக்கு 15 முதல் 17 தொகுதிகள் மட்டுமே அளிக்கப்படும் என அதிமுக கூறியதால் உடன்பாடு ஏற்படாத நிலையில் தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியது.கூட்டணியில் இருந்து வெளியேறிய அடுத்த நொடியில் அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது தேமுதிக.
அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிகவினருக்கு இன்றுதான் தீபாவளி என்றும்அக்கட்சியின் துணை செயலாளர் எல் .கே.சுதீஷ் கடுமையாக விமர்சித்திருந்தார். அதேபோல் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சிங்கம் குகையிலிருந்து வெளியே வந்துவிட்டது , இனி வேட்டை தான் என்றும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைய தேமுதிக உழைக்கும் என்றும் வெளிப்படையாக அறிவித்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், தேமுதிகவை கட்டிக்காக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன். 40 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து வருபவர் கேப்டன். என் அப்பாவை போலவே நானும் மக்களுக்காக உழைப்பேன். இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை.


