திமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது தொகுதிகள் யார் யாருக்கு வழங்குவது என்பதை குறித்த பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஏற்கனவே, சட்டப் பேரவையில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.
இந்தநிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 3 தொகுதிகளுக்கான ஒப்பந்த கையெழுத்திடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
அதன்படி, வரும் சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


