சசிகலா காரை ஓசூர் அருகே தடுத்து நிறுத்தியது போலீஸ். இதனால், பதற்றம் நிலவியது. அப்போது கிருஷ்ணகிரி போலீசார் ஒரு நோட்டீசை சசிகலாவிடம் கொடுக்க வந்தனர். சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டீயன் அந்த நோட்டீசை வாங்கிக்கொண்டார்.
அதிமுக கொடியுடன் தடையை மீறி காரில் வந்ததால் அதைக்கண்டித்து காவல்துறை அந்த நோட்டீசை கொடுத்தது. ஆனால், காரில் இருந்து அதிமுக கொடியை போலீசார் அகற்றவில்லை.
அதிமுக கொடியுடன் வந்தால் காரில் இருந்து கொடி அகற்றப்படும் என்று காவல்துறை கடுமையாக எச்சரித்திருந்தது.
சசிகலா இன்று காலையில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டார். தமிழக எல்லைக்கு முன்னரே தனது காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றிவிட்டு, அதே நேரம் இன்னொரு காரில் ஏறி பயணித்தார். அந்த காரிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. அதிமுக அடையாள வைத்திருப்பரின் கார் என்பதால் அதில் தமிழகம் வருவது பிரச்சனை இல்லை என்பதால் சசிகலா அந்த காரில் வருகிறார்.
இந்நிலையில், ஓசூர் அருகே சசிகலா காரை தடுத்து நிறுத்தியது போலீஸ். இதனால் பதற்றம் நிலவியது. அப்போது கிருஷ்ணகிரி போலீசார் ஒரு நோட்டீசை சசிகலாவிடம் கொடுக்க வந்தனர். சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டீயன் அந்த நோட்டீசை வாங்கிக்கொண்டார்.




