Type Here to Get Search Results !

ஒருவர் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு விட்டார்; இனி நடக்க வேண்டியது நடக்கும்.. மு.க.ஸ்டாலின்

பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று காலையில் புறப்பட்டார். தமிழக எல்லைக்கு முன்னரே தனது காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றிவிட்டு, அதே நேரம் இன்னொரு காரில் ஏறி பயணித்தார். 



அந்த காரிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. அதிமுக அடையாள வைத்திருப்பரின் கார் என்பதால் அதில் தமிழகம் வருவது பிரச்சனை இல்லை என்பதால் சசிகலா அந்த காரில் வருகிறார்.



ஓசூர் அத்திப்பள்ளியில் சசிகலாவுக்கு பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்றனர். ஏராளமான தொண்டர்கள் சசிகலாவுக்கு பூச்செண்டு கொடுத்தனர்.



சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் சசிகலா.


இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , ‘’ஒருவர் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு  விட்டார். இனி நடக்க வேண்டியது நடக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies