Type Here to Get Search Results !

சசிகலா வரவேற்பு: கெடுபிடி காட்டும் காவல் துறை | கிருஷ்ணகிரியில் சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிப்பு

சசிகலா இன்று காலை பெங்களூரிலிருந்து சென்னை திரும்ப உள்ள நிலையில் அமமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க காத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.



வி கே சசிகலாவின் தமிழக வருகையை முன்னிட்டு விதிமீறல்கள் தடுத்தல் தொடர்பான செயல் முறைகளை கடைபிடிக்க வேண்டியது சம்பந்தமாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


வி கே சசிகலா அவர்களின் வாகனத்தின் பின்பு 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது .



கட்சியினரின் இதர வாகனங்கள் பின் தொடர்ந்து வர அனுமதி இல்லை. அவர்கள் வாகனம் வழியிலேயே நிறுத்தப்படும்.


வி கே சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்துவது விதி மீறலாகும்.


ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் அங்கு உள்ள கூட்டத்தில் 10 சதவீத அளவு சீருடை அணிந்த அமமுக தொண்டர்கள் நிறுத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.


பட்டாசு வெடிப்பதற்கும் பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை.


கொடி, தோரணங்கள், பேனர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கக்கூடாது. விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 


அம்மா மக்கள் முன்னேற்ற கழக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அறிவழகனிடம் இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

சசிகலாவை வரவேற்று வைத்த பேனர்கள் கிழிப்பு 


கிருஷ்ணகிரியில் சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிப்பு 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies