Type Here to Get Search Results !

நபிகள் நாயாகத்தை பற்றி அவதூறாக பேசிய பாஜக பிரமுகருக்கு கடும் கண்டனம் -அமைச்சர் வேலுமணி

நபிகள் நாயாகத்தை பற்றி பாஜக பிரமுகர் அவதூறாக பேசியதை கண்டிக்கத்தக்கது என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். இதற்கு, பல தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 


கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வெடிக்கவே, கல்யாணராமன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பாஜக பிரமுகர் கல்யாணராமனின் அவதூறு பேச்சுக்கு அமைச்சர் வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் உட்பட உலகமே போற்றும் நபிகள் நாயகத்தை இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது.


மதத்தை வைத்து அரசியல் செய்வது தவறான விஷயம். இதை தமிழக அரசு ஒரு போதும் ஏற்காது. பாஜகவினரே இதனை கண்டித்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies