Type Here to Get Search Results !

அமமுக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை: திருப்பத்தூரில் நடந்த கொடூரம் #AMMK

திருப்பத்தூர் அடுத்த கௌதம்பேட்டை பகுதியை சேர்ந்த வானவராயன் (30) என்பவர் அமமுக கட்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். 


இந்த நிலையில் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபற்றி, திருப்பத்தூர் நகர காவல் நிலைய போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 


இதையடுத்து, கொலை சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில், அமமுக நிர்வாகி மர்மநபர்களால் வெட்டிகொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies