சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் பேரவையில் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்.
இதையடுத்து, ஓபிஎஸ் பேசியபோது, தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை பின்பற்றி, சிறப்பான நிர்வாகியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளங்கி வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உலக அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது என்றார்.தொடர்ந்து பேசிய அவர், நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது. மேலும், பொருளாதாரத்தில் எந்தவொரு பாதகமான தாக்கமும், ஏற்படாமலிருக்க பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்றார்.
தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் சிறப்புக்கள் :
தமிழ்நாடு அரசின் கடன் சுமை அடுத்த ஓராண்டில் ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்
தமிழ்நாடு அரசின் கடன் சுமை தற்போது, ரூ.4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் ₹5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்
கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி செலவிடப்பட்டுள்ளது
ஜெயலலிதாவின் வேதாநிலையம் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது
சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.19,420 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வித்துறைக்கு ரூ.5478 கோடி ஒதுக்கீடு
தமிழா நாட்டில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உள்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்
தமிழக அரசின் கடன்சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு
அனைத்து அரசு பள்ளிகளிலும் 6முதல் 10-ஆம் வகுப்புவரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்.


