திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை மற்றும் பல்லடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், 'விவசாயிகளுக்கான அரசாக அதிமுக அரசு திகழ்கிறது. கனிமொழி போகும் இடமெல்லாம் பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
மேலும் அவர் பேசுகையில், விவசாயிகள் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் விதமாக 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் பயன்படுத்தும் பம்புசெட்களுக்கு மும்முனை மின்சாரம் 24மணிநேரமும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தேன். தமிழகம் நீர் & மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றிருப்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். pic.twitter.com/nT94r9f0kO
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 12, 2021


