Type Here to Get Search Results !

தேர்தல் தேதி வந்தவுடன் 10,12ஆம் வகுப்பு பொது தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.


தமிழ்நாட்டில்  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு கிடந்த நிலையில் தற்போது, மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் தற்போது குறைய தொடங்கிய நிலையில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள், திறக்கப்பட்டது. 


அதேபோல, 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் கருதி பள்ளிகளை திறந்ததாக தமிழக அரசு அறிவித்தது. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிவித்தது.

இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,  தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவீசுவது வழக்கம் தான். ஆனால், முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி தேர்தலுக்கு முன்பாகவே விவசாய கடனை ரத்து செய்து விட்டார். மேலும், 10 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளை நூலகமாக மற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.


மேலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். தேர்தல் தேதி வந்தவுடன் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் பற்றிய அட்டவணை வெளியிடப்படும். 12 ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்” என்றார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies