ரஜினி மக்கள் மன்றத்தினர், மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, நீங்கள் எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேரலாம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவதில்லை என்ற நிலையில் உறுதியானர். இதனையடுத்து அவரது ரசிகர் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் திமுகவின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் கணேசன் மற்றும் ரஜினி ரசிகர்கள் ஜனவரி 17லில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்ட அறிக்கையில்: ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் தங்களை இணைந்து கொள்ளலாம்.
நீங்கள் வேறு எந்தவொரு அரசியல் கட்சிகளில் இணைந்தாலும், நீங்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.