மிதக்கும் சென்னை: ஒன்றிணைவோம் வாங்க... திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு
சென்னை நவ.07.,
கனமழையால் மிதக்கும் சென்னை மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை உடனடியாக நிறைவேற்ற அரசு அதிகாரிகளுடன் இணைந்து செயப்படவேண்டும். ஆகேவ நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், வடகிழக்குப் பருவமழையின் காரணமாக முன்கூட்டியே ஆலோசனைக்கூட்டம் நடத்தி, அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் கனமழை பெய்துவருவதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை, இன்றுநான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். இதுபோன்று அமைச்சர்களும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து திமுக நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, மக்களின் இன்னல்களை போக்கிடத் தீவிரமாக செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.