Type Here to Get Search Results !

நகை வியாபாரியிடம் கொள்ளையடித்த 7 பேர் கைது

நகை வியாபாரியிடம் கொள்ளையடித்த 7 பேர் கைது


கோயம்புத்தூர் வடவள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நகை வியாபாரியை வழிமறித்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் நகை வியாபாரி சண்முகம். இவர் கடந்த 30ஆம் தேதியன்று சக்தியமங்கலத்தில் இருந்து தங்க நகைகளை வாங்கி, ஹால்மார்க் நகையாக மாற்றுவதற்காக 2 கிலோ தங்கம், 7 லட்சம் ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.


அப்போது தொண்டாமுத்தூர் அருகே அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு கொள்ளையர்கள், சண்முகத்தை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.


இது குறித்து வழக்குப்பதிவு செய்த வடவள்ளி காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.



கொள்ளையர்கள் கைதுஇந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அப்துல் ஹக்கீம், அஸ்ரப் அலி, பவானி, வெங்கடாச்சலம், பவர் சிங், தினேஷ் ராவல், ரஞ்சித் சிங் ஆகிய 7 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


மேலும் தலைமறைவாகவுள்ள இரண்டு பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies