விவசாய நிலத்தில் தொழிற்பேட்டை வேண்டாம்: ஆட்சியரின் காலில் விழுந்து மனு அளித்த விவசாயிகள்..!
விவசாய நிலத்தில் திட்கோ தொழிற்பேட்டை வேண்டாம் எனக்கோரி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து, விவசாயிகள் மனு அளித்தனர்.
கோயம்புத்தூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமானது கடந்த இரு தினங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த முகாமில் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, கோயம்புத்தூர் அன்னூர்- மேட்டுப்பாளையம் வழியில் திட்கோ (TIDCO) தொழிற்பேட்டை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 3,000 ஏக்கருக்கும் மேலுள்ள விவசாய நிலங்கள் கையக படுத்தப்படும் எனக்கூறி, அதனை நிறுத்த வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
இதையடுத்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம், இது குறித்து மனுக்களை அளித்தனர். அப்போது சில விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து மனுவை அளித்தது காண்போரை கண் கலங்க செய்தது.




