Type Here to Get Search Results !

"அற்புதம்மாள்" வாழ்க்கையை படமாக்கும் இயக்குநர் வெற்றிமாறன்

அற்புதம்மாள் வாழ்க்கையை படமாக்கும் இயக்குநர் வெற்றிமாறன்



ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.




பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அரசன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவர், தற்போது விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 



இந்தநிலையில் வெற்றிமாறன்  இயக்கவுள்ள அடுத்தடுத்த படங்கள் மற்றும் இணைய தொடர் குறித்து சமீபத்தைய நேர்காணலில் கூறியுள்ளார்.



அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வாழ்க்கையை படமாக உருவாக உள்ளதாக வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார். 

பேரறிவாளன்  அற்புதம்மாள்

பேரறிவாளனின் விடுதலைக்காக அற்புதம்மாள் பல்வேறு சட்ட போராட்டங்களையும், முயற்சிகளையும் எடுத்து வருகிறார். இந்த நிலையில் அவரின் வாழ்க்கையை முழுமையாக படமாக்க திட்டமிட்டு இருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies