Type Here to Get Search Results !

அய்யோ... அய்யோ... கூவத்தூரில் ஊத்திக்கொடுத்து குடியைக் கெடுத்தவர் டிடிவி.தினகரன் -அமைச்சர் சி.வி.சண்முகம் #Minister_CV_Shanmugam #Sasikala #Admk #TTV_Dinakaran

நிர்வாகிகள்தான் கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் அப்படியில்லை என்று சில மாதங்களுக்கு முன்பாக பேசியதால், அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார் அமைச்சர் சி.வி.சண்முகம். துணைமுதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் சசிகலா பக்கம் சாய்கிறார் என்பதைத்தான் மறைமுகமாக அப்படி சொல்லியிருக்கார் அமைச்சர் என்று சொன்னார்கள் அதிமுகவினர்.

அதிமுகவிற்குள் சசிகலா மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டி வந்த சி.வி.சண்முகம், சசிகலா காரில் அதிமுக கொடி கட்டி வரக்கூடாது என்றும் டிஜிபி அலுவலத்திற்கு சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் சி.வி.சண்முகம்.

சசிகலா சென்னை வந்து இரண்டு தினங்கள் ஆகிவிட்ட நிலையில், தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘டிடிவி தினகரனிடம் இருந்து சசிகலாவை காப்பாற்ற வேண்டும்’ என்றார் சி.வி.சண்முகம்.


அவர் மேலும், ‘தினகரனையும் சசிகலாவையும் மீண்டும் அதிமுகவில் இணைப்பது என்பது கனவிலும் நடக்காத காரியம்’என்றார்.


கூவத்தூரில் ஊத்திக்கொடுத்து கூத்தாடி குடியைக் கெடுத்தவர் டிடிவி தினகரன். அவரிடம் இருந்து சசிகலா தப்பித்துக் கொள்ள வேண்டும்.


சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். அந்த குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று மீண்டும் மீண்டும் அழுத்திச்சொன்னார்.


பின்னர், அதிமுக இயக்கம் ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் இனியும் மீண்டும் ஒருமுறை ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்து சிக்கிக் கொள்ள மாட்டோம்’’ என்று உறுதியாகச்சொன்னார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies