Type Here to Get Search Results !

இளையராஜா ஸ்டூடியோ கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது -நடிகர் ரஜினிகாந்த் #IlayarajaStudio #ActorRajinikanth #Ilayaraja

பிரசாத் லேப் பிரச்னைக்கு பிறகு சென்னை தி நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகளை அங்கு மேற்கொண்டு வருகிறார்.



இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை இளையராஜா தி.நகர் வீட்டுக்கு சென்று, இளையராஜாவுடன் பல விசயங்கள் பேசியிருக்கிறார். 

அதன்பிறகு, இளையராஜா சொந்தமாக ஸ்டூடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு, அந்த ஸ்டூடியோவுக்கு இளையராஜாவுடன் சென்று இருக்கிறார் ரஜினிகாந்த். 


ஸ்டூடியோ முழுதும் சுற்றி பார்த்து, வியப்பில், கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என இளையராஜாவிடம் கூறியிருக்கிறார்.


இந்நிலையில், இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டூடியோவுக்கு திடீரென வந்த ரஜினிகாந்த்,  இளையராஜா உள்ளிட்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். 

சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள், விழாக்களில் கலந்து கொள்வதில்லை. ரஜினியின் இந்த வருகை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies