Type Here to Get Search Results !

மனிதர்களுக்கும் பரவிய பறவைக் காய்ச்சல்..! முதல் தொற்று பதிவு..!

பறவைக் காய்ச்சலை உண்டாக்கும்  இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக பறவைக் காய்ச்சல் மனிதருக்கு தொற்றியுள்ளது ரஷ்யாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், இன்ஃப்ளூயன்ஸா 'ஏ' வைரசின் எச்5 என்8 திரிபுடன் மனித நோய்த் தொற்று உண்டானதை, ரஷ்யாவின் வெக்டர் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, ரோஸ்ட்போட் ரெப்னாட்ஸர் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.


மேலும், ரோஸ்போட் ரெப்னாட்ஸரின் ஆராய்ச்சி மையத்திலிருந்து விஞ்ஞானிகள் முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பு குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இதில், ரஷ்ய கூட்டமைப்பில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் எச்5 என்8 திரிபுடன் மனித நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான முதல் வழக்கு ஒரு ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டது என்று தலைவர் அன்னா போபோவா கூறினார்.

இதையடுத்து, ரஷ்யாவின் தெற்கில் உள்ள ஒரு கோழிப் பண்ணையின் ஏழு ஊழியர்களிடையே இந்த காய்ச்சலின் மரபணுப் பொருளை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். அங்கு டிசம்பரில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


நான் குறிப்பிட்ட நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட ஏழு பேரும் நன்றாக உணர்கிறார்கள். மேலும், அவர்களுக்கு லேசான மருத்துவ அறிகுறிகள் மட்டுமே இருந்தன என்று போபோவா உறுதியளித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies