Type Here to Get Search Results !

2022’க்குள் வோடபோன்-ஐடியா சேவைகள் நிறுத்தம்..! நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! #AirTel #Vodafone #Idea #Jio

வோடபோன்-ஐடியா நிறுவனம் இந்தியாவில் 3ஜி சேவைகளை நிதியாண்டு 2022’க்குள் மூடிவிட திட்டமிட்டுள்ளது. 

இதன் மூலம் முழுவதும் 4ஜி-மையப்படுத்தப்பட்ட டெலிகாம் நிறுவனமாக மாற திட்டமிட்டுள்ளது. இருந்தாலும்,தொலைபேசி சந்தாதாரர்களின் பெரிய பகுதியைக் கொண்டிருப்பதால் அதன் 2 ஜி சேவைகளை தொடர்ந்து இயக்கும் என அறிவித்துள்ளது.


வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள், இன்று அதன் காலாண்டு வருவாய் அழைப்பில், அதன் ரூ 25,000 கோடி நிதி திரட்டும் திட்டங்களில் தாமதங்கள் குறித்து கவலைகளை எழுப்பியது. இதனால், முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, விரைவில் 3ஜி சேவைகள் மூடப்படும் என்று கூறியது.


நாங்கள், எடுக்கும் திசையில் 3ஜி இனி தேவையில்லை. இதையடுத்து, சிலருக்கு 3ஜியில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் இருப்பதால் 4ஜி பயன்பாடு குறைவாக உள்ளது. என்று தலைமை நிதி அதிகாரி அக்ஷய மூந்திரா ஆய்வாளர்களிடம் கூறினார். வோடபோன்-ஐடியாவில்  இன்னும் 11 மில்லியன் 3ஜி பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இருந்தாலும், 268 மில்லியன் பயனர்களில் 149 மில்லியனை இன்னும் 2ஜி தான் வைத்திருக்கிறது.எனவே, நீண்ட காலத்திற்கு மரபுவழி தொழில்நுட்பத்தை தொடர்ந்து வழங்கும். என்று நிர்வாக இயக்குனர் ரவீந்தர் தக்கர் கூறினார்.

இந்தநிலையில், 4ஜி மட்டும் நெட்வொர்க்கை இயக்கும் சந்தைத் தலைவர் ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் தொழில்நுட்பம் மட்டுமே இருப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ஏர்டெல், வோடபோன்-ஐடியா  இரண்டும் பழைய ஆப்ரேட்டர்களாக இருப்பதால், மூன்று தொழில் நுட்பங்களையும் வழங்குகின்றன.


வோடபோன் ஐடியா 5ஜி தயார்

இந்தநிலையில், ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களது 5ஜி வலிமையை அறிவித்துள்ள நிலையில், தக்கர் வோடபோன் ஐடியாவும் 5ஜி சேவைக்கு தயாராக உள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் அமைப்புக்கு போதுமான ஆய்வுகள் தேவை என்றும் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies