Type Here to Get Search Results !

சாத்தான்குளம்: ஆளுங்கட்சி பிரமுகரின் பாதுகாப்பு! -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சிக்கிய பின்னணி

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு, தன்மீது வழக்கு தொடப்படும் எனத் தெரிந்திருந்ததால், ஆளுங்கட்சி பிரமுகரின் பாதுகாப்பில் தங்கியிருந்தார். அங்கிருந்து சொந்த ஊர் செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டார்.



சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொடூரமாகத் தாக்குதலுக்கு உள்ளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.




சிபிசிஐடி போலீஸ் ஐஜி-யான சங்கர் தலைமையில், நேற்று (ஜூலை 1-ம் தேதி) முதல் விசாரணை நடந்து வருகிறது. 12 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், தனித்தனி குழுக்களாக விசாரணை நடக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடந்துவருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies