சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொடூரமாகத் தாக்குதலுக்கு உள்ளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
சிபிசிஐடி போலீஸ் ஐஜி-யான சங்கர் தலைமையில், நேற்று (ஜூலை 1-ம் தேதி) முதல் விசாரணை நடந்து வருகிறது. 12 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், தனித்தனி குழுக்களாக விசாரணை நடக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடந்துவருகிறது.


