Type Here to Get Search Results !

எம்எல்ஏ விடுதியில் சிக்கிய எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏக்கு தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 


ஒப்பந்தப்பணி தருவதாக ரூ.1.25 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ மீது சென்னை காவல் ஆணையரிடம் நேற்று ஒப்பந்தக்காரர் திருவேங்கடம் என்பவர் புகார் கொடுத்த நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இந்நிலையில் சென்னையில் எம்எல்ஏ விடுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏயிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்துள்ளன. 2014 முதல் 2018 ஆம் ஆண்டுவரை சென்னை மாநகராட்சியில் 464 .02 கோடிக்கு ஒப்பந்தங்களை தமக்கு நெருக்கமான வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன .


தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கியது குறித்து எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏயிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் டெண்டர்கள் மூலம் முறைகேடு செய்து சொத்து குவித்தது குறித்தும் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏயிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் யாரும் எம்எல்ஏ விடுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அத்துடன் சட்ட ஒழுங்கு போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies