புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வரும்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா, உண்ணாவிரதம் என பல தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதுதொடர்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன் கூடுதலாக புதுச்சேரி ஆளுநராக பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டார். தற்போது, கோவை மாவட்டத்தில் குடியேற இருப்பதாக தெரிகிறது. கோவை மாவட்டத்துள்ள தொண்டாமுத்தூரில் மிக பிரம்மாண்டமான மாளிகை ஒன்று கிரண்பேடிக்காக கட்டப்பட்டு வருவதாக பி.ஜே.பி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


