கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஒவ்வொரு பகுதியிலும் பாரத் ரத்னா’ டாக்டர் எம்ஜிஆரின் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கட்சி நிர்வாகிகள், எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினர்.
அங்கிருந்த எம்ஜிஆர் சிலை, வளாகம் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பிறந்தநாள் விழாவை கொண்டாட தலைமைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் காலை 9 மணி முதலே அதிமுக தலைமைக் கழகம் வர தொடங்கினார்கள்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இருவரும் காலை 10.15 மணியளவில் தலைமைக்கழகம் வந்தனர்.
அப்போது தொண்டர்கள், புரட்சி தலைவர் புகழ் ஓங்குக என்று வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
அதன் பிறகு அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அங்கிருந்த கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியையும் ஏற்றி வைத்தனர். அங்கு கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
விழாவில் கலந்துகொண்ட அவை தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், எம்.சி.சம்பத், செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகை செல்வன், சோமசுந்தரம்,
அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன்,
அதிமுகவின் மாவட்ட கழக செயலாளர்கள் விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், வேளச்சேரி அசோக், பால கங்கா, வெங்கடேஷ்பாபு, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் - பரங்கிமலை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம், துரைப்பாக்கம் டி.சி.கோ விந்தசாமி, மாணவர் அணி ராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் என்ற சின்னையன்,
மேலும், அதிமுக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கும், படங்களுக்கும் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.