Type Here to Get Search Results !

சசிகலா வந்ததும் அதிமுகவுக்கு கூட்டி வருவேன்: இன்னோவா கேட்கும் பி.எஸ்.பாண்டியன்

நான் இப்போதும் அதிமுகதான் என்னை கட்சியை விட்டு நீக்கினால் உங்களுக்குத்தான் நஷ்டம். ஆனால், சசிகலா வந்ததும் அவரை அதிமுகவுக்கு கூட்டி வருவேன்.

பி.எஸ்.பாண்டியன்


அதிமுக வெற்றிக்கு உழைத்த தனக்கு அதிமுக தலைமை இன்னோவா கார் வாங்கி கொடுக்க வேண்டும் பி.எச். பாண்டியனின் சகோதரர் பி.எஸ். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் சகோதரர் பி.எஸ்.பாண்டியன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்தவன் நான் என தெரிவித்த அவர், சாத்தான்குளம் விவகாரத்தினை ஐ.ஜி.சங்கர் திறமையாக கையாள்வதாக தெரிவித்தார்.

அதே வேளையில் தென்மண்டல ஐ.ஜியாக இருந்த சண்முக ராஜேஸ்வரன் பணி சரியில்லை எனவும் அவர் மீது ஏற்கனவே பல புகார்கள் தெரிவித்து இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். தலை சரியாக இருந்தால்தான் வால் சரியாக இருக்கும் என கூறிய அவர், ஆரம்பத்திலேயே சண்முக ராஜேஸ்வரனை மாற்றி இருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்காது என்றார்.

சசிகலா


ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் மீது ஏற்கனவே புகார் கொடுத்திருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை எனவும் ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தயவினால்தான் சாத்தான்குளம் சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்த அவர், தற்போதைய ஐ.ஜி.சங்கர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கையேந்தும் மாநிலங்கள்... முதலிடத்தில் தமிழகம்!

மேலும், தான் இப்போதும் அதிமுகதான் என தெரிவித்தவர், தன்னை கட்சியை விட்டு நீக்கினால் உங்களுக்குத்தான் நஷ்டம் எனவும் தெரிவித்தார்.

அதேபோல, சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அதிமுகவிற்கு கூட்டி வர போகின்றேன் என தெரிவித்த அவர், சசிகலாவை தான் எதிர்க்க வில்லை என்றார். கடந்த தேர்தல்களில் அதிமுக வெற்றிக்கு உழைத்த தனக்கு அதிமுக தலைமை இன்னோவா கார் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies