Type Here to Get Search Results !

சசிகலாவை பிரேமலதா சந்திக்க உள்ளதாக தகவல்

சசிகலா பிரேமலதா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு  சசிகலாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. 

தற்போது வரையில் அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருப்பதாக பிரேமலதா உள்ளிட்டோர் கூறிவரும் நிலையில், தற்போது அதிமுகவினர் எதிரி எனக் கூறிவரும் சசிகலாவை அவர் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுகவிடம் 40 தொகுதிகளை கேட்டிருப்பதாக தெரிகிறது. அதற்கு அதிமுக ஒப்புக் கொள்ளாததால் அதிமுக–தேமுதிக கூட்டணியில் பிரச்னை எழுந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேர்தலில் தனித்து போட்டியிட இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என கடுமையாக விமர்சித்தார். அதே சமயம் சசிகலா பூரண குணமடைந்து வரவேண்டும் எனவும், சசிகலா வருகையால் அதிமுக கட்சியில் பாதிப்பு என்பது உட்கட்சி விவகாரம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  கூட்டணி விவகாரத்தில் தங்களை அழைத்து பேசததால் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies